Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரம் அருகே கபடி போட்டி இலங்காபுரிபட்டணம் அணிக்கு முதல் பரிசு

ஜுன் 05, 2023 12:46

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே இலங்காபுரிபட்டணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் இலங்காபுரிபட்டணம் அணி முதல் பரிசு பெற்றது.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள  இலங்காபுரிபட்டணத்தில், ஈஸ்வரன் கோயில் விசாகத்திருவிழா, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஈ.பி.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 2 ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் எம்.ஆர்.தங்கரத்தினம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

மேலும் இப்போட்டியில் முதல்பரிசு ரூ. 15,001 இலங்காபுரிபட்டணம் அணியும், 2வது பரிசு ரூ. 13,001,  பூலாங்குளம் செந்தூர் முருகன் அணியும், 3வது பரிசு ரூ.10,001 அழகாபுரி அணியும், 4 வது பரிசு ரூ. 8001 நெல்லையப்பபுரம் அணியும், 5வது பரிசு ரூ. 6001 பெத்தநாடார்பட்டி லக்கி ஸ்டார் அணியும், 6வது பரிசு ரூ. 4001 திப்பணம்பட்டி சாரல் அணியும், 7வது பரிசு ரூ.2001 குறும்பலாப்பேரி கே.எம்.சி. ஜுனியர் அணியும், 8வது பரிசு ரூ.2001 ரோஜாக்கூட்டம் அணியும், 9வது பரிசு ரூ.1001 மேலப்பாவூர் அணியும், 10வது பரிசு ரூ.1001 சாலைப்புதூர் இளைஞர் குழு அணியும், 11வது பரிசு ரூ. 1001 கீழப்பாவூர் பாவூர் கிங்ஸ் அணியும் பெற்றன. அனைத்து அணிகளுக்கும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணி ராஜ், வார்டு உறுப்பினர் கைக்கொண்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்